கர்ப்பாசனம் (Garbha Pindasana, Embryo in Womb Pose)
கர்ப்பாசனம் என்றால் சேயிருக்கை என்று பெயர் அதாவது கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் நிலை.
கர்ப்பாசனம் பயிற்சி செய்யும் முறை :
குக்குடாசனம் செய்து முடிந்ததும், அதே போன்று பத்மாசனத்தில் அமர்ந்து கைகளைக் கால்களின் சந்துகளில் விட்டு மெதுவாகக் கால்களை மேலே தூக்கி மார்புடன் அனைத்துக்கொண்டு காதுகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
![கர்ப்பாசனம் (Garbha Pindasana, Embryo in Womb Pose) கர்ப்பாசனம் என்றால் சேயிருக்கை என்று பெயர் அதாவது கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் நிலை.](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgviEsdadtXc7MTXiFq5GWYiB744FM_7qsdOdw_pfBmsvvSQJO2mE0JvIA4YQBiiuCtzS_P5Hyb1BwR4mk1Timh7onRsrmRJr5Llj0Mb6xmb62TLbZXQH2CYOLZBjlsQaSZE8fodR0GPP8oHFdRdkvUi7VkFn_4UpiCC1yI1BQ2LMHvJrKaPfrkxsSbMg/s16000/Garbha%20Pindasana.jpg)
நேர அளவு :
பத்து முதல் இருபது வினாடி வரை இது போன்று நிறுத்தவும். இந்த ஆசனத்தை இரண்டு முறை செய்யலாம்.
கர்ப்பாசனம் பலன்கள் :
இந்த ஆசனம் செய்வதினால் கால். கைகளுக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது. அஜீரணம். மலச்சிக்கல் அகன்று நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும்.
பயிற்சியாளர் கவனத்திற்கு :
ஆரம்ப சாதகர்கள் காலை உயர்த்தும் போது பின்னுக்கு விழுந்து விடாமல் முதலில் சுவரோமாக இருந்து பழகுவது நலம்.