பெஞ்சமின் பிராங்க்ளின்:

 ஒரு மனிதன் தன் நேரத்தை முறையாக சிறுவயதிலிருந்து பயன்படுத்தி வந்தால் அவன் உலக மாமேதைகளில் ஒருவராக திகழலாம் என்பதை தன் வாழ்க்கையின் மூலம் பளிச்சென்று வெளிப்படுத்திய சிலரில் அமெரிக்கா தந்த உத்தம உழைப்பாளி மாபெரும் சிந்தனையாளர், பத்திரிகையாளர், சிறந்த விஞ்ஞானி, சிறந்த இலக்கியவாதி. 

மக்கள் பயன்படுத்தும் பல கண்டுபிடிப்புகளை வழங்கிய கண்டுபிடிப்பாளர். அமெரிக்க நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய விடுதலை வீரர், சிறந்த அயல்நாட்டு தூதுவர் என பல்வேறு திறமைகளுக்காக உலக மக்களால் பாராட்டிப் போற்றப்படுபவர் பெஞ்சமின் பிராங்க்ளின் ஆவார். அமெரிக்கா வழங்கிய அற்புத மாமனிதரான பெஞ்சமின் பிராங்க்ளின் தந்தை மெழுகுவர்த்தி தயாரித்து வியாபாரம் செய்து குடும்பம் நடத்தும் ஜோன்ஸா பிராங்க்ளின்.

ஒரு மனிதன் தன் நேரத்தை முறையாக சிறுவயதிலிருந்து பயன்படுத்தி வந்தால் அவன் உலக மாமேதைகளில் ஒருவராக திகழலாம் என்பதை தன் வாழ்க்கையின் மூலம் பளிச்சென்று வ

அவர்களுக்கு முதல் மனைவி மூலம் நான்கு குழந்தைகள் பிறந்தன. இரண்டாவது மனைவி அபையாகபோல்கர் மூலம் 14 குழந்தைகள் பிறந்தன. நியூ இங்கிலாந்தில் போஸ்டன் நகரில் வாழ்ந்த அக்குடும்பத்தில் 15 - வது பிள்ளையாக பிறந்தார் பெஞ்சமின். வீடு நிறைய பிள்ளைகள் இருந்தாலும் அவர்களில் இவர் சுறுசுறுப்பாகவும், அதிக குறும்புத்தனங்கள் செய்பவராகவும் இருந்தாலும் எந்தப் பொருளையும் ஆழ்ந்து நோக்குபவராகவும் இருந்தார். 

பெஞ்சமின் பிராங்க்ளின் இளமைப் பருவம்:

தன் சிறுவர் கூட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்துவதில் ஆர்வமுடையவராய் திகழ்ந்தார். தன் அக்காள்கள். அண்ணன்கள் சொல்லிக் கொடுப்பதை கவனமாய் கேட்டு அதை அப்படியே சொல்லும் ஆற்றலை பெற்றிருந்தார். பள்ளிக்கு செல்வதற்கு முன்பே நிறைய பாடங்களை தன் மூத்தவர்களிடம் கற்றுக் கொண்டார். ஏழு வயதில் ஆரம்ப பள்ளியில் சேர்க்கப்பட்டார். 

எட்டு வயதில் போஸ்டனிலுள்ள இலக்கண பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கு லத்தீன் மொழி சொல்லிக் கொடுக்கப்பட்டது. பின்னர் அவரே விரும்பி இத்தாலி, ஸ்பானிஷ் மொழிகளைக் கற்றார். 9 - ம் வயதில் கணக்கும் எழுத்தும் கற்றுத் தரும் ஜீப்ரௌனல் பள்ளியில் சேர்ந்தார். அங்கு அவர் கணிதத்தில் சிறந்தவராக மாறினார். அவருக்கு கணிதம் மிகவும் பிடித்தமானதாக இருந்தது. 

அவரே புதிய புதிய கணிதங்களை உருவாக்கினார். அவரின் கணிதத்திறனைக் கண்டு வியந்தனர். ஓய்வு நேரத்திற்கு தந்தைக்கு உதவியாளராக இருந்தார். அச்சிறுவயதிலேயே தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களை படிப்பதிலும், புதியன கற்றுக் கொள்வதிலும் ஆர்வமாய் செயல்பட்டார். தனது அண்ணன் ஜேம்ஸ் வைத்திருந்த அச்சுக்கூடத்தில் அச்சுப்பணிகளை கற்றுக் கொண்டார்.

அச்சமயத்தில் நிறைய நூல்களை படித்து அறிவை பெருக்கிக்கொண்டார். ஜேம்ஸ் நவ இங்கிலாந்து செய்தி என்ற பத்திரிக்கையை நடத்தினார். அப்போது  பெஞ்சமின் னுக்கு 14 வயது. அப்பத்திரிக்கையில் வரும் கட்டுரைகளை படித்துவிட்டு தானும் அவ்வாறான கட்டுரை எழுத வேண்டும் என்று விரும்பினார். எழுதவும் செய்தார். தான் எழுதியது என்று தெரிந்தால் அண்ணன் பத்திரிக்கையில் வெளியிடமாட்டார் என்பதை உணர்ந்து பெயரின்றி எழுதி அனுப்பினார். பெயரற்று வந்த கட்டுரை நன்றாக இருப்பதை படித்து அறிந்த ஜேம்ஸ் அக்கட்டுரையை வெளியிட்டார். தன் கட்டுரை வெளி வந்ததில் மகிழ்ந்த பெஞ்சமின் தொடர்ந்து எழுதினார்.

 அக்கட்டுரைகளும் வெளி வந்தன. தன் தம்பிதான் கட்டுரைகளை எழுதுகிறான் என்பதை அறிந்த ஜேம்ஸ் தம்பியை கட்டுரைகளை எழுதக்கூடாது என்று தடை விதித்தார். அவர் எழுதிய கட்டுரை ஒன்று அரசுக்கு எதிராக ( அப்போது அமெரிக்கா இங்கிலாந்தின் அடிமை நாடாக இருந்தது. இருந்ததால் ஜேம்ஸ்க்கு ஓராண்டு சிறை தண்டனை கிடைத்தது. தன்னால் தன் அண்ணன் சிறை சாலைக்கு சென்றதில் வேதனைப்பட்டார். 17 வயதில் வேலை தேடி நியூயார்க் சென்றார். பல கஷ்டங்கள் பட்டார். பல வேலைகள் செய்தார். தனது சிறு சேமிப்பைக் கொண்டு எழுதுபொருள் கடையை துவக்கினார்.

இடிதாங்கி பற்றிய ஆராய்ச்சி :

ஓய்வு நேரங்களில் எழுதினார், நிறைய படித்தார், தனது 26 வயதில் ஏழை "ரிச்சடின் பஞ்சாங்கமம்" என்ற நூலை எழுதி வெளியிட்டார். அச்சுத்தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். டிபோராரீடு என்ற பெண்ணை மணந்தார். அவர் தனது நூலால் தான் வசித்த பிலாடல்பியா பகுதியில் பிரபலமானார். சமூக நடவடிக்கைகளில் பங்கு கொண்டார். ஜார்ஜ் வாஷிங்டன் போன்றவர்கள் அமெரிக்க சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டிருந்தனர்.

பெஞ்சமின் னுக்கு படிப்பின் மீது ஆர்வம் இருந்ததால் ஏழை எளியவர்களும் படிக்க வேண்டும் என்று முதன்முதலில் வாசக சாலையை துவக்கினார். இது அமெரிக்காவின் முதல் வாசகசாலை. தெருவிளக்கு ஒளி உண்டு மூன்று பக்கங்கள் மறைக்கப்பட்டதை உணர்ந்த அவர் நான்கு பக்கமும் கண்ணாடிகளை பதித்து எல்லா பக்கமும் ஒளி தெரியச் செய்தார். மக்களின் பாதுகாப்பிற்காக மக்கள் காவல்படை அமைத்தார். 

அப்போதெல்லாம் வீடுகளில் குளிர்காய விறகுகள் பயன்படுத்துவார்கள். இவர் ஸ்டவ் அடுப்பை உருவாக்கினார். புதியன செய்வதில் ஆர்வம் காட்டினார். அப்போது கிட்டப்பார்வை, தூரப்பார்வைக்கு தனித்தனி கண்ணாடிகள் உபயோகப்படுத்தினார். இவர் ஒரே கண்ணாடியில் இருவேறுபட்ட லென்ஸ்களை பொருத்தி சாதனை செய்தார்.

சாதனை விருது:

மின்சாரத்தில் பாசிடிவ், நெகடிவ் என்ற இரு தன்மைகள் இருப்பதை 1746 - ஆம் ஆண்டு ஆய்வு செய்து வெளியிட்டார். மின்சார பாட்டரியை முதன் முதலில் தயாரித்தார். மழை நாளில் மின்னலை கண்டார். இடியால் பல வீடுகள் சேதமாவதை ணர்ந்தார். மின்னலும், மின்சாரமும் ஒன்றே கண்டுபிடித்து கூறினார். இடியால் பெரிய பெரிய கட்டிடங்கள் என்று பாதிக்கப்படுவதை உணர்ந்த அவர் இடிதாங்கியை கண்டுபிடித்தார். இந்த அரிய கண்டுபிடிப்பை கண்டு விஞ்ஞான உலகம் அவரை பாராட்டியது.

1771 - ஆம் ஆண்டு அவருக்கு பிரெஞ்சு அரசு அறிவியலுக்கான அகாடமி பரிசை வழங்கி சிறப்பித்தது. அவரின் செயல்பாடுகளால் அவர் புகழ் அமெரிக்கா மட்டுமல்ல, உலகெங்கும் பரவியது. அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தீவிரமாய் அமெரிக்கா விடுதலைக்காக போராடும் தியாகிகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார். 

அமெரிக்க விடுதலைக்காக பத்திரிக்கை மூலம் எழுச்சி கட்டுரைகள் தீட்டி மக்களுக்கு உத்வேகம் மூட்டினார். அவரின் நீதிவழுவாத ஒழுக்க நெறிகளை பாராட்டினர் மக்கள். அவர் பிலடெல்பியாவின் நீதிபதியாக ஆளுநரால் நியமனம் பெற்றார். அவரின் அரிய சேவையை பாராட்டி நகர தலைவராகவும் தேர்ந்தெடுத்தனர். பின்னர் அவர் பென்சில்வேனியா நகரத்தில் மேயராகவும் நியமிக்கப்பட்டார்.

 உள்நாட்டு கலவரத்தை பற்றி பேச தூதுவராக லண்டன் சென்றார். அங்கு ஐந்தாண்டுகள் தங்கி நல்ல முடிவுகளோடு தாயகம் திரும்பிய அவருக்கு மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். அமெரிக்க சுதந்திரத்திற்காக போராடினார். 1776 - ஆம் ஆண்டு அமெரிக்கா சுதந்திரமடைந்தது. தனது 70 வயதிலும் நாட்டின் ஆவணங்களை தயாரிப்பதில் தனது உழைப்பை வழங்கினார். 

அமெரிக்க நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய அவர் டிசம்பர் மாதம் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளின் கமிஷனராக நியமிக்கப்பட்டார். 1783 - ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கும், பிரெஞ்சு அரசுக்கும் ஓர் உடன்படிக்கை ஏற்பட மூலகர்த்தாவாக செயல்பட்டு அதன் மூலம் அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார். அவரின் சிறந்த சேவையை பாராட்டி பிரெஞ்சு மன்னர் 16 - ம் லூயி அவர்கள் அவருக்கு 400 வைரங்கள் பதித்த அரசு பதக்கத்தை வழங்கினார்.

பெஞ்சமின் பிராங்க்ளின் மறைவு :

அமெரிக்க மூத்த அரசியல் மேதையான அவரை அமெரிக்க அரசியல் சாசனத்தை தயாரிக்கும் குழுவில் முக்கிய உறுப்பினராக தேர்ந்தெடுத்து அவரை பெருமைப்படுத்தினர். சிறந்த அரசியல் ஞானி சிறந்த சுதந்திர போராட்ட தியாகி சிறந்த பத்திரிக்கையாளர் சிறந்த புதியன கண்டுபிடிப்பாளர் சிறந்த இலக்கிய மேதை சிறந்த விஞ்ஞானி என பல துறைகளில் சாதித்தவர். 

அமெரிக்காவின் முன்னேற்றமே தன் முன்னேற்றமென கருதியவர். கடும் உழைப்பு, நேர்மை, ஒழுக்கம். பிறர்நலம் பேணுதல், நாட்டு முன்னேற்றம் என ஓயாது உழைத்த அப்பெருமகன் 1790 - ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17 - ம் நாள் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார். இன்று அமெரிக்க மக்கள் அவரின் சாதனைகளை மறக்காமல் அவரை போற்றி வணங்கி வருகின்றனர். தன் நாட்டிற்கு மட்டுமின்றி உலக மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட அவரை என்றும் நினைவில் கொள்வோம்.

Previous Post Next Post